போர்க் குற்றங்கள் பற்றிய
ஐ.நா அறிக்கை செப்டம்பர் 2015 வரை ஒத்திவைப்பு

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் பற்றிய .நாவின் விசாரணை அறிக்கையை  இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரை ஒத்திவைப்பதற்கான .நா. மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரைக்கு மனித உரிமைப் பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.     
இந்த ஒரு முறை மட்டுமே தாம் இதனை ஒத்திவைப்பதாக அவர் வலியுறுத்தினார்.    இலங்கையில் மாறி வரும் நிலைமைகளில் இந்த அறிக்கையை பலப்படுத்தும் வகையில் மேலும் ஆதாரங்கள் கிடைக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.   
முன்னைய அரசைப் போல் அல்லாது இலங்கையின் புதிய அரசு மனித உரிமைகள் குறித்த பல விடயங்களில் ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ள நிலையில், அவர்களது கடப்பாடுகளை யதார்த்தமாக்க தனக்கு இது உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.   

முன்னைய ஆணையாளரான நவநீதம்பிள்ளைக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட மூன்று நிபுணர்களும் இந்த கால நீடிப்பு அவசியமானது என்று தனக்கு கூறியுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top