பஞ்சாப் விமானத் தளத்துக்குள் தீவிரவாதிகள்
புகுந்து தாக்குதல்
4 தீவிரவாதிகள், 3பாதுகாப்புப்
படையினர் மரணம்!
பஞ்சாப்
மாநிலம் பதன்கோட்
விமானப்படை தளத்தில் நிகழ்ந்த தாக்குதலில் ஈடுபட்ட
4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படை
வீரர்கள் 3 பேர் மரணம் அடைந்தனர்.
பயங்கர
ஆயுதங்களுடன் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள், பாகிஸ்தானைச்
சேர்ந்த ஜெய்ஷ்-இ-மொஹம்மது
இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக இந்திய ஊடகங்கள்
செய்திகளை வெளியிட்டுள்ளன
இன்று
அதிகாலை 3.30 மணியளவில் பஞ்சாப் விமானப் படை
தளத்தில் நுழைந்து
தாக்குதல் நடத்திய
தீவிரவாதிகள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர்
பதில் தாக்குதல்
நடத்தியதாகவும், மேலும் சில தீவிரவாதிகள், பக்கத்தில்
உள்ள இடங்களில்
மறைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தீவிர
சோதனை நடத்தப்படுவதாகவும்
தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.