டில்லியில் எவ்வித போராட்டம் நடத்தினாலும்
உடனடி கைது :
டில்லி பொலிஸார் அறிவிப்பு
டில்லியில்
இன்று நரேந்திர
மோடி பிரதமராக
பதவியேற்க உள்ள
நிலையில், அங்கு
எவ்வித ஆர்ப்பாட்டமோ,
போராட்டமோ நடத்த
அனுமதி இல்லை
என்றும், அதையும்
மீறி யாரேனும்
போராட்டம் நடத்தினால்
உடனடியாக அவர்கள்
கைது செய்யப்படுவார்கள்
என்று டில்லி
பொலிஸார்
அறிவித்துள்ளனர்.
நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு வரும் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஜந்தர் மந்தரில் மதிமுக
சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக மதிமுக அறிவித்துள்ள நிலையில், அங்கு வரும் வை.கோ உள்ளிட்ட மதிமுகவினரை கைது செய்யவும் அங்கிருக்கும் காவல்துறை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.