இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உத்தரவு
இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உத்தரவிட்டுள்ளார்.
நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா நாளை மாலை 6 மணிக்கு டில்லி குடியரசுத் தலைவர் மாளிகையின் முகப்பு வாயிலில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க வருமாறு தெற்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான "சார்க்' உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவின் அழைப்பை ஏற்று மோடியின் பதவியேற்பு விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கலந்து கொள்கிறார். ஜனாதிபதி இந்தியா செல்வதையொட்டி, இருநாடுகளிடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக இலங்கை சிறைகளில் இருக்கும் இந்திய மீனவர்களை விடுவிக்க அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.