இலங்கை தென்கிழக்கு
பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில்
சிறப்பு விருது
பெற்ற மாணவிகள்.
இலங்கை
தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின்
9 வது பட்டமளிப்பு
விழாவில் நான்கு
மாணவிகளுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருக்கின்றனர்.
பிரயோக
விஞ்ஞான பீடத்தில்
இருந்து எம்.என்.பஸ்லுல் ஹஸ்னா, வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் இருந்து ஏ.ஆர்.பாத்திமா
தபாணி, கலை கலாச்சார பீடத்தில் இருந்து எம்.ஆர்.றாசியா, வர்த்தக முகாமைத்துவ பீடத்தை
சேர்ந்த ஜீ.எம்.எம்.பாத்திமா ரக்சானா ஆகிய மாணவிகளே இவ்வாறு சிறப்பு விருதுகள் பெற்ற
மாணவிகளாவர்
பிரயோக
விஞ்ஞான பீடத்தில்
இருந்து தெரிவான
எம்.என்.பஸ்லுல் ஹஸ்னா,
மர்ஹும் கலாநிதி
எம்.எச்.எம்.அஸ்ரப்
ஞாபகார்த்த விருதையும் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில்
இருந்து ஏ.ஆர்.பாத்திமா
தபாணி, அல்
ஹாஜ் ஏ.எல்.இப்ராலெப்பை
ஞாபகார்த்த விருதையும் கலை கலாச்சார பீடத்தில்
இருந்து எம்.ஆர்.றாசியா,
பேராசிரியர் கைலாசபதி ஞாபகார்த்த விருதையும் பெற்றுக்
கொண்டனர்.
இதன்போது
இவர்கள் தென்கிழக்குப்
பல்கலைக் கழகத்தின்
வேந்தர் பேராசிரியர்
அச்சி முகம்மட்
இஷாக்கினால் தங்கப் பதக்கம் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
வர்த்தக
முகாமைத்துவ பீடத்தை சேர்ந்த மற்றொரு மாணவி
ஜீ.எம்.எம்.பாத்திமா
ரக்சானா, இஸ்மாயில்
ஞாபகார்த்த விருதுக்கு தெரிவு செய்யப்பட்டிருந்த போதிலும் அவர் இந்நிகழ்வின்போது போது சமூகமளித்திருக்கவில்லை.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.