டில்லி விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் நடிகர் பிரகாஷ்ராஜ்
மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு.
டில்லியிலிருந்து
சென்னை திரும்புவதற்காக
டில்லி
விமான நிலையத்துக்கு
சென்றிருந்த நடிகர் பிரகாஷ்ராஜ் ஏர் - இந்தியா
கவுண்டரில் பயணிகள் வரிசையில் நின்று கொண்டு
இருந்துள்ளார். அப்போது வரிசையில் நின்ற பயணி
ஒருவர் பிரகாஷ்ராஜை
தள்ளிவிட்டுள்ளார். இதனால் நிலை
தடுமாறி கீழே
விழப்போன பிரகாஷ்ராஜ்
சுதாரித்து நின்றுள்ளார். இதனால் கோபம் அடைந்த
அவர் அந்த
பயணியை கண்டித்ததால்
இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம்
அந்த பயணியின்
சட்டை காலரை
பிடித்து இழுத்துள்ளார்
பிரகாஷ்ராஜ். பதிலுக்கு அவரும் பிரகாஷ் ராஜின்
சட்டையை பிடித்துள்ளார்.
நிலைமை விபரீதமாவதை
உணர்ந்த மற்ற
பயணிகள் இருவரையும்
சமாதானம் செய்துள்ளனர்
என செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.