நற்பிட்டிமுனை மயானத்தின்
அவலத்தைப் போக்குவதற்கு விரைவில் நடவடிக்கை;
மக்கள்
சந்திப்பில் கல்முனை முதல்வர் உறுதி!
( அஸ்லம் எஸ்.மெளலானா
)
நற்பிட்டிமுனை
தமிழ் பகுதியிலுள்ள
பொது மயானத்தை
துப்பரவு செய்து,
மின் விளக்குகளையும்
பொருத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கல்முனை
மாநகர முதல்வர்
சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர் உறுதியளித்துள்ளார்.
இன்று
புதன்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது
நற்பிட்டிமுனை தமிழ் பகுதி மக்கள் சிலரினால்
முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றே முதலவர் இந்த
உறுதிமொழியை வழங்கினார்.
நற்பிட்டிமுனை
பொது மயானத்தின்
அவல நிலை
குறித்து இதன்போது
முதல்வரிடம் எடுத்துரைக்கப்பட்டது. இதனை
முதல்வர் நேரடியாக
வந்து அவதானித்து
நடவடிக்கை எடுக்க
வேண்டும் எனவும்
அவர்கள் கோரிக்கை
விடுத்தனர்.
இதனை
ஏற்றுக் கொண்ட
முதல்வர் மாநகர
சபை உறுப்பினர்
அமிர்தலிங்கம் சகிதம் தான் அங்கு விஜயம்
செய்து நிலைமைகளை
ஆராய்வதாகவும் அதனை மாநகர சபை மூலம்
உடனடியாக துப்பரவு
செய்வதற்கும் மின் விளக்குகளைப் பொருத்துவதற்கும் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அவர்
குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.