பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், முன்னாள் அமைச்சர் மன்சூர்

ஆகியோர்களுக்கு கெளரவம்

கல்முனை ஸாஹிறா தேசியக் கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்க கொழும்புக் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் கொழும்பு – 7ல் அமைந்துள்ள தேசிய நூதனசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பழைய மாணவர்கள் சங்க கொழும்புக் கிளையின் தலைவர் டாக்டர் சனூஸ் காரியப்பர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்வி பிரதியமைச்சர் மொஹான் லால் பிரதம அதிதியாகவும், முன்னாள் அமைச்சர் .ஆர்.மன்சூர், திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர்  அதிதிகளாகவும்  கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் உள்ளிட்ட கல்முனை ஸாஹிராவில் கல்வி பயின்று இன்று இலங்கையின் நாலாபாகங்களிலும் பிரகாசிக்கும் பொறியியலாளர்கள், வைத்தியர்கள், உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பழைய மாணவர்கள் சங்க பிரதிநிதிகளினால் முன்னாள் வர்த்தக, வாணிபத்துறை அமைச்சர் .ஆர்.மன்சூர், திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர் கௌரவிக்கப்பட்டார்கள்.







0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top