3 வயது அண்ணன், 18
மாத தம்பியை சுட்டுக் கொன்ற விபரீதம்
அமெரிக்காவில் சம்பவம்
மூன்று வயதே ஆன அண்ணன் தனது 18 மாத தம்பியை கைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற விபரீதம் அமெரிக்காவில் நடந்தேறியுள்ளது.
அரிசோனா மாகாணத்தில் பேசன் பகுதியில் குடியிருப்பு ஒன்றில், இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. 18 மாதக் குழந்தை ஒன்று தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இறந்துவிட்டதாக காவல்துறைக்கு தகவல் வந்தது.
விரைந்து சென்ற காவல்துறை, உயிரிழந்த குழந்தையின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், கைத்துப்பாக்கியை கவனக்குறைவாக குழந்தைகள் எட்டும் விதத்தில் வைத்த நபர் குறித்து விசாரிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.