சிறையில் அடைக்கப்பட்டுள்ள 152 இந்திய மீனவர்கள்
விடுவிப்பு:
பாகிஸ்தான் நல்லெண்ண
நடவடிக்கை
புதிய
பிரதமராக நரேந்திர
மோடி பதவியேற்கவுள்ள
நிலையில் அவரது
பதவியேற்பு நாளான திங்கள்கிழமை பாகிஸ்தான் சிறையில்
அடைக்கப்பட்டுள்ள 152 இந்திய மீனவர்களை
நல்லெண்ண அடிப்படையில்
அந்நாட்டு அரசு
விடுவிக்க முடிவு
செய்துள்ளது.
நரேந்திர
மோடி பதவியேற்பு
விழாவில் பங்கேற்குமாறு
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு அழைப்பு
விடுக்கப்பட்டதற்கு அந்நாடு பதில்
நட்புறவு பாராட்டும்வகையில்
இந்த நடவடிக்கை
அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.