இந்தியா இலங்கைக்கு கட்டளையிட முடியாது:

அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா பதில்


1987ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில்தான், 13-வது சட்டத்திருத்தம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அது, இந்தியாவால் திணிக்கப்பட்ட ஒன்று.
ஆகையால், அது சட்டப்படி செல்லுபடியாகுமா என்பது கேள்விக்குரியது. அதற்கு அப்போதே எதிர்கட்சியாக இருந்த எங்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்திருந்தது'' என்று அமைச்சர் ன நிமால் சிறிபால டிசில்வா தெரிவித்திருக்கிறார்.
இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும் வகையிலான 13-வது சட்டத் திருத்தத்தை அந்நாட்டு அரசு முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ள நிலையில், அமைச்சர் நிமால் டி சில்வா இக்கருத்தைக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர், செய்தியாளர்களிடம்  தெரிவித்திருப்பதாவது:
""இலங்கையில் வாழும் மக்களுக்கு அதிகாரத்தை எந்த வகையில் பகிர்ந்தளிப்பது என்பது குறித்து கட்டளையிட, இந்தியாவுக்கோ அல்லது வேறு எந்த நாட்டுக்கோ உரிமையில்லை.
இலங்கை நாடாளுமன்றத் தெரிவுக் குழுதான், அதிகாரப் பகிர்வு குறித்து விவாதிப்பதற்கான அமைப்பாகும்; இந்த விவகாரத்தில் இறுதி முடிவை இலங்கை நாடாளுமன்றம்தான் எடுக்க முடியும்.
இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது குறித்து எப்படி இலங்கை அறிவுரை கூறுவதில்லையோ, அதேபோல் இலங்கையில் உள்ள மாகாணங்களுக்கு எந்த வகையில் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதை இந்தியா எமக்குக் கூறக் கூடாது.
1987ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில்தான், 13-வது சட்டத்திருத்தம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அது, இந்தியாவால் திணிக்கப்பட்ட ஒன்று.

ஆகையால், அது சட்டப்படி செல்லுபடியாகுமா என்பது கேள்விக்குரியது. அதற்கு அப்போதே எதிர்கட்சியாக இருந்த எங்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்திருந்தது'' என்று  அமைச்சர் நிமால்  சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top