மோடி அன்பாகக் கொடுத்த சால்வை :
நன்றி கூறியிருக்கிறார்
நவாஸ் ஷெரிப்பின் மகள்
பிரதமர்
மோடியின் பதவியேற்பு
விழாவில் பங்கேற்க
இந்தியா சென்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்
ஷெரிப்பிடம் அவரது தாயாருக்கு சால்வை உள்ளிட்ட
பரிசுப் பொருட்களை
இந்தியப் பிரதமர் மோடி அளித்திருந்தார்.
பாகிஸ்தான்
பிரதமர் நவாஸ் ஷெரிப் இஸ்லாமாபாத் திரும்பிய
பிறகு, அந்த
சால்வையை தனது
தாயாரிடம் அளித்துள்ளார்.
இது குறித்து,
ஷெரிப்பின் மகள் மரியம் தனது டிவிட்டரில்,
எனது பாட்டிக்கு
அழகிய சால்வையை
பரிசாக அளித்த
பாரதப் பிரதமர்
நரேந்திர மோடிக்கு
நன்றி. சால்வையை
எனது தந்தை,
பாட்டியிடம் அளித்துள்ளார் என்றும் பதிவு செய்துள்ளார்.
![]() |
மர்யம் ஷெரிப் |
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.