சிறைச்சாலையில் வழங்கப்பட்ட
இரவு உணவை நாமல் சாப்பிட மறுப்பு!


கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ சிறைச்சாலையில் வழங்கப்பட்ட இரவு உணவை உட்கொள்ளவில்லை என சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றிரவு நாமல் ராஜபக்விற்கு சிறைச்சாலையில் உணவு வழங்கப்பட்ட போதிலும் அந்த உணவை நாமல் ராஜபக்ஸ ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
நிதி மோசடி விசாரணைப் பிரினால் நேற்று கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஸ எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமல் ராஜபக்ஸ கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். முக்கிய பிரபுக்கள் தடுத்து வைக்கப்படும் சிறைச்சாலையில் வார்டில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்
அத்துடன் அவருக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விசே பாதுகாப்பு வழங்கப்படும் சில கைதிகளுடன் நாமல் ராஜபக் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் ஆணையாளர் துசார உபுல்தெனிய ஊடகம் ஒன்றுக்கு இதனை தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலையில் வழங்கப்படும் இரவு உணவை நாமல் சாப்பிடவில்லை என்பதனை சிறைச்சாலை ஆணையாளர் உறுதி செய்துள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top