வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர்

அன்டனி ஜெயநாதன் திடீர் உயிரிழப்பு


வடமாகாணசபை உறுப்பினரும் பிரதி அவைத் தலைவருமான எம். அன்டனி ஜெயநாதன், இன்று காலை  முள்ளியவளைப்பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்து   உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த அவர், முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்தில்   அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் இருந்து தூக்கியெறியப்பட்டுள்ளது. விபத்தில் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்மரணமடைந்தார்.
தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் அன்டனி ஜெகநாதனுக்கு திடீரென்று தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது அவர் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்து காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது

இதனையடுத்து விபத்தில் சிக்கிய அவர் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.


அவரது சடலம், வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top