கொழும்பில் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக
நேற்று முதல் புதிய திட்டம்
கொழும்பில்
வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்கான புதிய வாகன ஒழுங்கு நேற்று
முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும்
18ஆம் திகதி
வரை இராஜகிரிய
சந்தியை அண்டியப்
பகுதியில் இந்தத்
திட்டம் ஒரு
பரீட்சார்த்த நடவடிக்கையாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்
வெற்றியின் அடிப்படையில் நாடு பூராகவும் அமுல்படுத்த
அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
ராஜகிரிய சந்தியிலிருந்து
ஆயுர்வேத சந்தி
வரை மற்றும்
ஆயுர்வேத சந்தியிலிருந்து
ராஜகிரிய சந்தி
வரை இரு
மருங்கு முன்னுரிமை
போக்குவரத்து திட்டம் அமுலாகிறது. குறைந்த செலவில்
கூடிய பிரயோக
பயன்பாட்டு ரீதியில் நாட்டின் போக்குவரத்து சேவைகள்
விருத்தி செய்யப்படவுள்ளன.
கொழும்பில்
இருந்து பயணிக்கும்
அனைத்து பஸ்
வண்டிகளும் ஸ்ரீ ஜயவர்தனபுர பிரதான பாதையில்
ஆயுர்வேத சந்தி
வரை பயணிக்கவுள்ளன.
கொழும்பு
நோக்கி வரும்
பஸ் வண்டிகளில்
பயணிப்பவர்களுக்கான இராஜகிரிய பஸ்
தரிப்பிடம்இ ஸ்ரீ ஜயவர்தனபுர பாதையில் ஜனாதிபதி
வித்தியாலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது.
176ம்
மற்றும் 177ம் இலக்க பஸ் வண்டிகளுக்காக
ஆயுர்வேத சந்தியில்
ஸ்ரீஜயவர்தனபுர பிரதான பாதையில் உள்ள பாலத்திற்கு
அருகில் தரிப்பிடம்
அமைக்கப்பட்டுள்ளது.
170, 190, 177, 168, 153, 176,
144, 186, 174, 175, 150, 171 ஆகிய இலக்கங்களைக் கொண்ட
பஸ் வண்டிகள்
இந்த புதிய
வாகன ஒழுங்கிற்கு
அமைய பயணிக்க
வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காரியாலய நேரங்களான
காலை ஏழு
மணி முதல்
ஒன்பது மணி
வரையும் மற்றும்
மாலை 4.30க்கும்
கொழும்பு கோட்டையிலிருந்து
பத்தரமுல்லை வரை சுமார் 150 தொடக்கம் 180 பஸ்
வண்டிகள் பயணிப்பதாக
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

0 comments:
Post a Comment