டுபாயிலிருந்து வந்த  இலங்கைப் பெண்ணொருவரிடம்
சென்னை விமான நிலைய அதிகாரிகளால்
 2 கிலோ தங்கம் பறிமுதல்


சுமார் 11 மில்லியன் இலங்கை ரூபாய் பெறுமதியான தங்கத்தை கடத்தமுயன்ற 33 வயதான இலங்கைப் பெண்ணொருவர். சென்னை விமானநிலைய அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டுபாயிலிருந்து சென்னைக்கு வந்த இலங்கையை சேர்ந்த ஜூவாலா என்ற பெண் பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 2 கிலோ எடைகொண்ட தங்கத்தை ஆடைக்குள் மறைத்து கடத்தி வந்துள்ளார் என சுங்க அதிகாரிகள் தெரிவித்தாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்து, பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு இந்திய நாணயத்தில் 60 லட்சம் ரூபாய் என அறிவிக்கப்படுகின்றது.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top