அட்டாளைச்சேனையில்………………..
முஸ்லிம் காங்கிரஸ் காரியாலயம் திறப்பு
கிழக்கு
மாகாண சபை
உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அட்டாளைச்சேனை
அமைப்பாளரும், உயர்பீட உறுப்பினருமான ஏ.எல்.எம்.நஸீரின்
ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை பிரதான வீதியில் தேர்தல்
காரியாலயம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ்
சார்பாக அட்டாளைச்சேனை
பிரதேசத்தில் வேட்பாளர் எவரும் தேர்தலில் போட்டியிடாத
போதும், ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ்
கட்சியின் வெற்றிக்காக
மாவட்ட ரீதியில்
முதன் முதலாக
அட்டாளைச்சேனையில் காரியாலயம் திறந்து
வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த
திறப்பு விழாவுக்கு
ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் சார்பில்
ஐக்கிய தேசியக்
கட்சியில் இம்முறை
பொதுத் தேர்தலில்
போட்டியிடுகின்ற மூன்று வேட்பாளர்களும்
கலந்து கொண்டு
சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில்
கட்சியின் உயர்
பீட உறுப்பினர்கள்,
போராளிகள், ஆதரவாளர்கள், அட்டாளைச்சேனை
பிரதேச சபையின்
முன்னாள் தவிசாளர்,
உறுப்பினர்கள் உலமாக்கள் உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.