குருநாகல் மாவட்டத்தின் பட்டியலில் ஒப்பமிட்டிருந்த
முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் றிஸ்வி ஜவஹர்ஷாவின்
பெயர் விரோதிகளின் சூழ்ச்சியால் நீக்கப்பட்டு ஒப்படைப்பு!
குருநாகல்
மாவட்டத்தின் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் பட்டியலில்
11ஆம் திகதி
இரவு கடைசி ஆளாக கையொப்பமிட்ட சட்டத்தரணி றிஸ்வி ஜவஹர்ஷா இன்று ஒப்படைக்கப்பட்ட ஐக்கிய தேசியக்
கட்சியின் வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் (டிபெக்ஸ் செய்யப்பட்டு ) நீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக அனுராதபுரம் கலாவெவ பிரதேசத்தை சேர்ந்த சாபி எனும்டாக்டரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
நேர்மையாக
இஹ்லாசுடன் முஸ்லிம் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து வந்த இவருக்கு. குருநாகல்
மாவட்டத்திற்கான முஸ்லிம் பாராளுமன்ற கனவை
வெற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் கை கூடி வந்த சூழ்நிலையில் விரோதிகளின் சூழ்ச்சியில் இவருக்கான வாய்ப்பு இல்லாமல் போயிருப்பது வேதனையான
விடயமாகும்.
![]() |
றிஸ்வி ஜவஹர்ஷா வேட்பாளர் பட்டியலில் ஒப்பமிட்டபோது |
![]() |
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.