சாய்ந்தமருது கடற்கரை
வீதியில் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல்
மையவாடி நிர்மாணிக்கும்
பணியை தொடர வேண்டும்
எனக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்
சாய்ந்தமருது
கடற்கரை வீதியில்
மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலுக்கு
எதிரே அமைக்கபடுகின்ற
ஜனாஸா மையவாடியை
நிர்மாணிக்கும் பணிகள் தனிநபர்களின் தலையீட்டில் நிறுத்தப்பட்டதை
தொடர்ந்து.மக்களின்
நிலையை அறிந்து
கொள்ள வருகை
தந்த கரையோர
பாதுகாப்பு மற்றும் வள முகாமைத்துவ அதிகார
சபை பணிப்பாளர்
நாயகம் தலைமையிலான
குழு இன்று
உரிய இடத்திற்கு
வருகை தந்திருந்தது.
அச்சந்தர்ப்பத்தில் அங்கு வருகை
தந்த பொதுமக்கள்
நிறுத்தப்பட்டிருக்கும் பணியை தொடர வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அங்கு ஆரம்பித்த
வாய் தர்க்கம் கை கலப்பில் முடிந்தது.இறுதியில் எந்த
தீர்வும் எட்டாது
அந்த குழு
இடத்தை விட்டு
அகன்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.