மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின்
உடல் தகனம்
உடல்
நலக் குறைவு
காரணமாக செவ்வாய்க்கிழமை
காலை உயிரிழந்த
மெல்லிசை மன்னர்
எம்.எஸ்.
விஸ்வநாதனின் உடல் தகனம் பெசன்ட்நகர் மின்மயானத்தில்
நடைபெற்றது.
மறைந்த
இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனின் இறுதி
ஊர்வலம், இன்று
காலை அவரது
இல்லத்தில் இருந்து துவங்கி பெசன்ட்நகர் மின்
மயானத்தை அடைந்தது.
ஏராளமான
முக்கிய பிரமுகர்களும்,
பொதுமக்களும் புடை சூழ எம்.எஸ்.விஸ்வநாதனின் இறுதி
ஊர்வலம் சாந்தோம்
பகுதியில் இருந்து
பெசன்ட் நகர் சென்றது.
அவரது
குடும்பத்தாரும், திரையுலகப் பிரபலங்களும், எம்எஸ். விஸ்வநாதனுக்கு
இறுதி அஞ்சலி
செலுத்தினர்.
மின்
மயானத்துக்கு எம்.எஸ்.வி.யின்
உடல் எடுத்துச்
செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
மெல்லிசை
மன்னராக திகழ்ந்த
எம்.எஸ்.விஸ்வநாதன் உயிர்
காற்றோடு காற்றாகக்
கலந்தது. அவரது
நினைவுகள், அவர் வடித்த அற்புதமான இசையால்
என்றும் நம்முடன்
கலந்திருக்கிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.