தண்ணீர் ஊற்றி ஓடும் புதிய மோட்டார்
பைக்
பிரேஸில் நாட்டில் கண்டுபிடிப்பு!
ஒரு லிட்டர் தண்ணீரில் 500 கிலோமீட்டர் ஓடும் மோட்டார் பைக் : பிரேஸில்காரரினால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
பிரேஸில் நாட்டின் சாவ் பாலோ நகரை சேந்ர்த ரிக்கேர்டோ ஆஸேவெடோ என்பவர் தண்ணீர் ஊற்றி ஓடும் பைக்கை கண்டுபிடித்துள்ளார். அவர் கண்டுபிடித்துள்ள இந்த புதிய மோட்டார் பைக் ஒரு லிட்டர் தண்ணீரில் சுமார் 500 கிலோமீட்டர் தூரத்துக்கு தங்குதடையின்றி ஓடக் கூடிய ஆற்றல் பெற்றுள்ளது என அறிவிக்கப்படுகின்றது.
டி பவர் ஹெச்20 என பெயரிட்டுள்ள இந்த புதிய மோட்டார் பைக் சாதாரண தண்னீர் நிரப்பி ஓடுவதோடு, பெற்றோல், டீசலில் ஓடும் வாகனங்களைப்போல் நச்சுத்தன்மை கொண்ட கார்பன் மோனாக்சைடு போன்ற வேதிப் பொருட்களை வெளியேற்றுவதில்லை. மாறாக வெறும் நீராவியை மட்டுமே வெளியேற்றுகின்றது, என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கூறும் ரிக்கேர்டோ இந்த மோட்டார் சைக்கிளில் அமைக்கப்பட்டுள்ள பெரிய அளவிலான பேற்றரியில் இருந்து கொள்கலத்தில் ஊற்றப்பட்ட தண்ணீரில் பாய்ச்சப்படும் மின்சாரமானது, அந்த தண்ணீரில் உள்ள மூலக்கூறுகளில் பொதிந்திருக்கும் ஹைட்ரஜன் எனப்படும் நீரியத்தின் ஆற்றலை வெளிப்படுத்துகின்றது.
இதன்வாயிலாக கிடைக்கும் உந்துசக்தி மூலம் காற்றை கிழித்துக் கொண்டு பறக்கும் இந்த மோட்டார் பைக், ஒரு லிட்டர் தண்ணீரில் சுமார் 500 கிலோமீட்டர் வரை செல்லும் என்று கூறியுள்ளார்.
https://youtu.be/jV8rpumumxo
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.