முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் மன்சூர் அவர்களுக்கும்
சம்மாந்துறை விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகளுக்கும்
இடையிலான கலந்துரையாடல்
சம்மாந்துறை
விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகளுக்கும்
மாகாண அமைச்சர்
மன்சூர் அவர்களுக்கும்
இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று 2015.07.15 ஆம் திகதி மாலை சம்மாந்துறையில் அமைந்துள்ள
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மக்கள்
செயலகத்தில், இடம்பெற்றது.
இக்கலந்துறையாடலில்
முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினரும், தவிசாளருமான ஏ.எம்.நௌஸாத் அவர்களின் மிக
நெருங்கிய நண்பரும்,
அவரின் முக்கிய
விடயங்களை கவனித்து
வந்த சபூர்த்தம்பி ஆசிரியர்
அவர்களும் கலந்து
கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன்
போது பல
முக்கிய விடயங்கள்
விவாதிக்கப்பட்டு, விளையாட்டு கழகங்களின்
பிரதிநிதிகளின் ஆக்கபூர்வமான ஆலோசனைகளும், கருத்துக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சபூர்த்தம்பி ஆசிரியர் அவர்களும் சம்மாந்துறையின் எதிர்கால
நலனை கருத்தில்
கொண்ட முக்கிய
கருத்துக்களை முன்வைத்து இதன்போது உரையாற்றினார்.
இக்கலந்துறையாடலில்
பிரதேச சபை
உறுப்பினர் எம்.ஐ.எம்.ரனூஸ், அமைச்சரின் பிரத்தியேக
செயலாளர் இணைப்புச்
செயலாளர் ஏ.எம்.தபீக், மக்கள் தொடர்பு
அதிகாரி யு.எல்.பசீர், உட்பட பிரமுகர்கள் மற்றும்
ஏராளமான விளையாட்டு
கழகங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர் என அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.