அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு அமோக
வரவேற்பு!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் அம்பாறையில் இருந்து மருதமுனை வரை வாகனத் தொடர் அணியாக ஊர்வலம் சென்ற கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களான கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப், மைஹோப் நிறுவனத்தின் உரிமையாளர் சித்தீக் நதீர் ஆகியோருக்கு மக்கள் பெரும் வரவேற்பு வழங்கினர் என அறிவிக்கப்படுகின்றது.
குறித்த வாகனத் தொடரணி ஊர்வலத்தில் பயணித்த குழுவினருக்கு வீதி ஓரங்களில் நின்ற வர்த்தகர்களும் பொதுமக்களும் மாலைகள் அணிவித்து மகிழ்ச்சியுடன் வரவேற்றதோடு வாழ்த்துக்களும் தெரிவிதனர் எனக் கூறப்படுகின்றது.
விஷேடமாக சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள வர்த்தகர்களும் பொது மக்களும் உச்சாகத்துடன் கூடிய வரவேற்பினை வழங்கி இவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.