நைல் நதியில் படகுகள் மோதல்
21பேர் பலி

எகிப்தின் நைல் நதியில் சரக்கு ஏற்றிச் சென்ற படகுடன் பயணிகள் படகு மோதி விபத்துக்குள்ளானது. இதில்21பேர் உயிரிழந்தனர் என அறிவிக்கப்படுகின்றது.
25 பயணிகளுடன் நைல் நதியில்  சென்று கொண்டிருந்த படகு, எகிப்து தலைநகர் கெய்ரோ அருகே உள்ள வாராக் என்ற இடத்தில் சரக்கு ஏற்றிச் சென்ற படகுடன் மோதியதில் பயணிகள் படகு கடுமையாகச் சேதமடைந்தது.
இதையடுத்து, அந்தப் படகு கவிழ்ந்து, நதிக்குள் மூழ்கியது. இதில் 21 பேர் உயிரிழந்தனர். 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மீட்புக் குழுவினர் வேறு யாரும் நீரில் மூழ்கியுள்ளனரா எனத் தேடி வருகின்றனர்.

இந்த விபத்து சம்மந்தமாக சரக்குப் படகின் மாலுமி கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top