பாவம் நிந்தவூர் மக்களே...
எழுத்தாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ். முத்துமீரான்
கழுதைகள், குதிரைகள், ஒட்டகங்கள், ஓணான்கள், உடும்புகள் சேர்ந்து
கூட்டம் வைத்து, கூத்தடித்து, சாப்பிட்டு அரசியல் சாக்கடைகளில் அசிங்கங்களை கரைத்து
விட்டு கும்மாளம் அடிக்கும் கோலங்கள் சேர்ந்து அரசியல் ஞானிகளாகி பளு சுமக்கும் எண்ணங்கள்
இருக்கும் வரை நிந்தவூர் வைத்தியசாலை விரைவில் சவக்காலையானாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை.
உலகம் புரியாத ஒட்டுண்ணிகளும் அரசியல் சூனியங்களும் ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் குப்பைக்குள் கிடந்து ஊளை இடுவதினால் எங்கள் நிந்தவூர் வைத்தியசாலை
என்றும் முன்னேறுவதற்கில்லை. மண்டூகங்கள் மழையில் கத்தினால் என்னதான் கிடைக்கப் போகிறது.
போலிக்கு புகழ் பாடும் போக்கிரிகள் அழுக்கு சீலைக்கு இத்திரி போடும் நுதல்கள் கத்துவது
புரியாணி பார்சல்களுக்கும் பெருமைக்கும் மட்டும் என்பது எங்களுக்கு தெரியும்.
நிந்தவூர் மக்களே...
உங்கள் நேத்திரங்களை திறந்து நன்றாகப் பார்த்து எதிர் வரும்
தேர்தலில் உண்மை விளங்க உயிர்த் துடிப்போடு எழுந்து நில்லுங்கள். சதா எங்களை எமாத்தும்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் UNP சட்டைக்குள் ஒழித்து வந்தாலும் உண்மையை நீங்கள் உணர்ந்து
உங்கள் வாக்குகளை போடுங்கள். காங்கிரஸ் கட்சியினால் அம்பாறை மாவட்டம் இதுவரை எதை பெற்றது?
அரசியலில் ஏதாவது ஓர் உயர் பதவி இங்கு ஏன் கிடைக்க வில்லை? கண்டி,
கொழும்பு மாவட்டத்தில் வாழுகின்றவர்களுக்கு மட்டும் தானா? ஆங்கிலம் தெரியும்? சிங்களம்
தெரியும்? எங்கள் மாவட்டத்தில் படித்து பட்டம் பெற்ற அறிவாளிகள் இல்லையா? காங்கிரஸ்
விடும் புலுடாக்களை இன்னும் நாங்கள் கேட்டுக் கேட்டு நாரே தக்பீர் சொல்லும் அடிமைத்துவம்
இனியும் மாறாதா?
எனவே படித்தவர்களே..
உங்கள் பங்களிப்பை செய்ய முன்வாருங்கள். போலிகள் அழியட்டும். புதுமை மலரட்டும்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.