பிலிப்பைன்ஸில் படகு கவிழ்ந்து 36 பேர் பலி
பிலிப்பைன்ஸில் 173 பயணிகளுடன்
சென்ற படகு
கடலில் கவிழ்ந்ததில்
36 பேர் பலியானார்கள். 19 பேரை காணவில்லை
என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ்
நாட்டின் லெய்டே
மாகாணத்திற்குட்பட்ட ஓர்மோக் நகரில்
இருந்து செபுவுக்கு
கிழக்கே உள்ள
காமோட்டெஸ் தீவுக்கு அக்கப்பல் சென்று கொண்டிருந்த
போது, கடலில்
வீசிய சூறாவளி
காற்றில் திடீரென
அப்படகு கடலில்
மூழ்கியது. தகவலறிந்த கடலோர காவல்படை வீரர்கள்
விரைந்து வந்து
கடலில் விழுந்து
உயிருக்கு போராடியவர்களையும்,
சடலங்களையும் மீட்டதாக அதன் லெப்டினன்ட்டான கிறிஸ்டோபர்
கேனட் கூறியுள்ளார்.
இச்சம்பவத்தில்
படகில் வந்த 19 பேரை காணவில்லை
என்றும், அவர்களை
தேடும் பணி
தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கேனட் கூறியுள்ளார்.
உயிருடன்
மீட்கப்பட்ட அனைவரும், ஓர்மோக்கை சுற்றியுள்ள மருத்துவமனைகளில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.