கல்முனை ஸாஹிறாக் கல்லூரி பழைய மாணவா்கள் சங்க
கொழும்புக் கிளையினரின் இப்தார் நிகழ்வுகள்
கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் பழைய மாணவா்கள் சங்கக் கொழும்புக் கிளையினரின் வருடாந்த இப்தார் நிகழ்வு நேற்று 1 ஆம் திகதி வெள்ளவத்தை மெரைன் கிரான்ட் ஹோட்டலில் சங்கத்தின் தலைவா் டாக்டா் சனுாஸ் காரியப்பா் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவரும் மேன்முறையீட்டு நீதிபதியுமான ஏ.எச்.எம். திலிப் நவாஸ் பிரதான உரை நிகழ்த்தினார்.
இந்த இப்தார் நிகழ்வுகளில் கல்லூரி அதிபர் பி.எம்.எம்.எம். பதுறுதீன், முன்னாள் அதிபர் கே.எல்.அபூபக்கர்லெவ்வை, கிழக்கு மாகான சபை உறுப்பினர் ஏ.ஏம்.ஜெமீல், ஓய்வு பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் மருதூர் ஏ மஜீத், உலமாக் கட்சித் தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீத் அதிபர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி, எம்.ஏ.கபூர் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
படங்கள்:- அஸ்ரப் ஏ சமத்
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.