ஆன்லைன் சிகிச்சை முறையை பிரபலப்படுத்த

கைகோர்க்கும் இந்தியா, பாகிஸ்தான் டாக்டர்கள்

ஆன்லைன் மூலமாக சிறந்த முறையில் சிகிச்சையளிக்கும் முறையை பிரபலப்படுத்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் டாக்டர்கள் கைகோர்த்துள்ளனர்.
உலகில் பல்வேறு நாடுகளிலிருந்தும் இந்தியாவில் சிகிச்சை பெற வருகின்றனர். அந்த அளவிற்கு இந்தியாவில் நவீன மருத்துவம் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது.
அந்தவகையில், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு சிகிச்சை பெற வருகை தருபவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. மற்ற ஆசிய நாடுகளை விட இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைகளில் அதிநவீன கருவிகள், மருந்துகள் மற்றும் திறமையான மருத்துவ நிபுணர்கள் இருப்பதே அதற்கு காரணமாகும்.
இதுபோன்ற மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு அவர்கள் இந்தியாவிற்கு வர பல நடைமுறை சிக்கல்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில் 'பீஸ் கிளினிக்' என்று அழைக்கப்படும் ஜியாவுதின் பல்கலைக்கழக மருத்துவமனை நிறுவப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை தொழிலதிபரான நாவித் அஸ்லாம் துவங்கினார். 10 ஆண்டுகளுக்கு முன் அவர் இதய அறுவை சிகிச்சை செய்வதற்காக இந்தியாவிற்கு வந்துள்ளார். அப்போது அவர் சந்தித்த நடைமுறை சிக்கல்களை வேறு எந்த நோயாளியும் சந்திக்க கூடாது என்ற நோக்கத்தில் இந்த ஆன்லைன் சிகிச்சை ஐடியாவை செயல்படுத்தியுள்ளார். இவரது ஐடியாவை கேட்டு ஆச்சர்யமடைந்த இந்திய மருத்துவர்கள் 'பீஸ் கிளினிக்' துவங்குவதற்கான அனைத்து உதவியையும் அவருக்கு செய்தனர்.

இங்கு மற்ற மருத்துவமனைகள் போல் அல்லாமல் இண்டர்நெட் மூலமாக சிகிச்சை வழங்கப்படுகிறது. அலர்ஜி முதல் கல்லீரல் பிரச்சனை வரை அனைத்து ஆபத்தான நோய்களுக்கும் நோயாளிகள் சிகிச்சை பெற முடியும். நோயாளிகள் இந்தியாவிலுள்ள மருத்துவ நிபுணர்களிடம் நேரடியாக ஆன்லைன் மூலம் முகம் பார்த்து பேச முடியும்.
இதற்காக, ஒவ்வொரு நோயாளிகளின் படுக்கைகளுக்கு அருகிலும் வெப் கேமிராவுடன் இணைக்கப்பட்ட டிராலி மற்றும் கம்ப்யூட்டர் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியாவிலுள்ள டாக்டர்கள் தினமும் நோயாளிகளுடன் உரையாடலாம், அவர்களுடைய உடல்நிலையில் ஏற்பட்டுவரும் முன்னேற்றத்தையும் கண்காணிக்க முடியும்.
நோயாளிகள் ஹை டெபனீஷன் வெப் கேமிரா முன் அமர்ந்து ஆன்லைன் வழியாக இங்குள்ள டாக்டர்களிடம் ஆலோசனைகளை பெற்று வருகின்றனர். மருத்துவ நிபுணர்களும் இ-மெயில் மூலமாக அனுப்பப்பட்ட நோயாளிகளின் மெடிக்கல் ஹிஸ்டரி மற்றும் ரிப்போர்ட்-களின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கிறார்கள்.

தற்போது, பாகிஸ்தானிலுள்ள ஜியாவுதின் மருத்துவமனை இந்தியாவின் மேதந்தா, அப்பல்லோ மற்றும் பார்டிஸ் போன்ற உயர் சிகிச்சை மருத்துவமனைகளுடன்  இணைக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top