13 நாட்களாக நடத்தப்பட்டுவரும் இஸ்ரேல் தாக்குதல்களில்
பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை
425 தாண்டியுள்ளது
13 நாட்களாக
நடத்தப்பட்டுவரும் இஸ்ரேல் தாக்குதல்களில்
பலியான பாலஸ்தீனர்களின்
எண்ணிக்கை 425 தாண்டியுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தகவல்
தெரிவித்துள்ளன.
கிழக்கு
காஸாவிலுள்ள ஒரு மாவட்டத்தில் மட்டும் 67ற்கும்
மேற்பட்ட பொதுமக்கள்
பலியாகியிருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள்
மேலும் தெரிவித்திருக்கின்றது.
இஸ்ரேலுக்கும்,
பாலஸ்தீன ஹமாஸ்
போராளிகளுக்கும் இடையேயான பகைமை, கடந்த இரண்டு
ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது விசுவரூபம்
எடுத்துள்ளது. ஹமாஸ் போராளிகள் ஆட்சி செய்து
வருகிற காஸாமுனை
மீது இஸ்ரேல்
கடந்த 8 ஆம்
திகதி தொடக்கம் போர் விமானங்கள் மூலம்
குண்டுமழை பொழிந்து
வருகின்றது.
பதிலுக்கு
இஸ்ரேல் நகரங்கள்மீது
ஹமாஸ் போராளிகள்
தொடர்ந்து ராக்கெட்
வீச்சு நடத்தி
வருகின்றனர்.13 நாட்களாக நடத்தப்பட்டுவரும்
இஸ்ரேல் தாக்குதல்களில்
பலியான பாலஸ்தீனர்களின்
எண்ணிக்கை 425 யை தாண்டியுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள்
தகவல் தெரிவித்திருக்கின்றன. மரணித்தவர்களில்
குழந்தைகளும் பெண்களும் அதிக எண்ணிக்கையில் இருந்து கொண்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள்
செய்தி வெளியிட்டுள்ளன.
கிழக்கு
காஸாவிலுள்ள ஒரு மாவட்டத்தில் மட்டும் 67 ற்கும்
மேற்பட்ட பொதுமக்கள்
பலியாகியிருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.