வயிற்றில்
கை, கால்களுடன்
54 ஆண்டுகளாக
இந்தியாவில் வாழும் அதிசய மனிதர்
54 ஆண்டுகளாக
வயிற்றில் வளர்ந்துள்ள
கை, கால்களை
அகற்றி உயிர்
கொடுங்கள் என
இந்தியாவிலுள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்தில் கூலித் தொழிலாளி ஒருவர் மனு கொடுத்துள்ளார்.
வேலூர்
மாவட்ட ஆட்சியர் ( அரசாங்க அதிபர் ) ஆர்.நந்தகோபால் தலைமையில்
நடந்த மக்கள்
குறை கேட்புக்
கூட்டத்திலேயே இவர் இம்மனுவைக் கொடுத்துள்ளார்.
இவர்
வயிற்றில் இரண்டு
கை, கால்கள்
வளர்ந்துள்ளன. இது பலரையும் ஆச்சரியத்தில்ஆழ்த்தியுள்ளது.
54 ஆண்டு வேதனை குறித்து விநாயகம் கூறும்போது, நான் பிறக்கும்போதே வயிற்றில் இரண்டு கை, கால்கள் இருந்தன. இந்த கை, கால்களை சுமந்துகொண்டு வெளியிடங்களுக்கு வேலைக்கு செல்ல முடியவில்லை. இதற்கிடையே எனக்கு திருமணமாகி, கலைச்செல்வி, அமுதவள்ளி என இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக எனது வயிற்றில் ஒட்டியிருக்கும் கை, கால்களை சுமக்க முடியாமல் அவதிப்படுகிறேன். என் உயிருக்கு ஆபத்து இல்லாமல் வயிற்றில் வளர்ந்துள்ள கை, கால்களை அகற்ற அரசு உதவ வேண்டும்’’ என்று மனுவில் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment