பம்பலப்பிட்டி அருகில்
ரயில் தடம்புரண்டுள்ளது.
மாத்தறையில்
இருந்து கொழும்பு கோட்டையை நோக்கி பயணித்த ரயில்
ஒன்றின் இரண்டு பெட்டிகள் பம்பலப்பிட்டி
ரயில் நிலையம் அருகில் சற்று
நேரத்திற்கு முன்னர் தடம்புரண்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
இந்த
விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விபத்தை அடுத்து கரையோர
ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு
நிலையம் தெரிவித்திருக்கிறது.

0 comments:
Post a Comment