லிபியாவில்
திரிபோலி விமானநிலையம் மீது
போராளிகள்
தாக்குதல்
லிபியாவில்
கடாபி கடந்த
2011-ம் ஆண்டு
ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட நாள் முதல் போராளிகள்
தொடர்ந்து தாக்குதல்
சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 13 ஆம் திகதி
தலைநகர் திரிபோலி
மற்றும் கிழக்கு
நகரமான பெங்காசி ஆகிய இடங்களில் போராளிகள் நடத்திய தாக்குதல்களில் 15-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே நேற்று முன்தினம் திரிபோலி விமான நிலையம் மீது போராளிகள் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 90 சதவீத விமானங்கள் மற்றும் கார்கள் சேதம் அடைந்தன. மேலும் 2 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.
லிபியாவில் ஏற்பட்டு வரும் தொடர் வன்முறை சம்பவங்களை அடுத்து அங்குள்ள தூதுவரை ஐ.நா. வெளியேற்றியுள்ளது., பாதுகாப்பு காரணமாக திரிபோலி விமானநிலையத்தை மூடவும் லிபியா அரசுக்கு ஐ.நா. அறிவுரை வழங்கியுள்ளது.

0 comments:
Post a Comment