சிறிலங்கா தெளஹீத் ஜமாஅத்தினரின் மார்க்க ஒன்று
கூடல் கட்டடத் தாக்குதல்
சாய்ந்தமருதில்
பாதுகாப்பு அதிகரிப்பு
சாய்ந்தமருது
பிரதேசத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை
மாவட்டம், கல்முனை - சாய்ந்தமருது கடற்கரை வீதியில் சிறிலங்கா தெளஹீத் ஜமாஅத்தினரின் மார்க்க ஒன்று கூடல்
கட்டடம் எனத் தெரிவிக்கப்படும் தகரக் கட்டடத்தின் மீது இனம் தெரியாதோரினால்
நேற்றிரவு தாக்குதல்
மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்தே பாதுகாப்பு
அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த
ஒன்றுகூடல் கட்டடத்திற்கு சம்பவதினமான நேற்று திங்கட்கிழமை
இரவு 7.00 மணியளவில்
ஒரு குழுவினர்
உள்நுளைந்து. தகரத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டடத்திற்குள் இருந்த பொருட்கள் மற்றும் கட்டடத்தின்
தகரங்களை உடைத்து
சேதமாக்கிய பின்பு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்தே
அங்கு பொலிஸ்
பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.