இன்றுடன் மூன்று வருடங்கள் பூர்த்தியாகியும்

வேலைகள் முடிவடையாது பாதியிலேயே இருந்து கொண்டிருக்கும் 

நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை (மத்திய) வீதி

எம்.சஹாப்தீன்





நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை ( மத்திய ) வீதியின் புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் (16.07.2014) மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன . ஆனால் , இன்னும் இதன் வேலைகள் முடிவடையாது பாதியிலேயே இருந்து கொண்டிருக்கின்றன .
கடற்கரையில் அமைந்துள்ள வைத்தியசலையின் அம்புலனடஸ் வண்டியின் போக்குவரத்திற்கும் , பொது சுகாதார காரியாலயத்தினதும் , ஆயுர்வேத வைத்தியசாலையினதும் , ஹாஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியினதும் போக்குவரத்திற்கு அவசியமான இவ்வீதியை பொது மக்களும் அதிக அளவில் கடந்த காலங்களில் பயன்படுத்தி வந்துள்ளார்கள் .
இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த இவ்வீதியை புனரமைப்பு வேலையை பூர்த்தி செய்யாது , வேறு வீதிகள் பலவும் , நிந்தவூரில் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன .
நிந்தவூர் மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஒற்றுமைப்பட்டு அபிவிருத்தி வேலைகளை செய்யாது , தனித்தனியே செயற்படுவதனாலும் , ஆளுக்கு ஆள் கழுத்தறுப்பு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டு வருவதனாலும் , நிந்தவூரில் வைத்தியசாலை வீதி போன்ற பல முக்கிய அபிவிருத்திகள் செய்யப்படாதிருக்கின்றன .
நிந்தவூர் மக்கள் பிரதிநிதிகளை ஒற்றுமைப்படுத்துவதற்கு ஒரு சிலர் முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார்கள் . அவர்களின் முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன . காரணம் , எம் . பிமாரும் , தவிசாளரும் ஒற்றுமைப்பட்டால் தங்களின் பிழைப்பு கெட்டுப் போய்விடுமென்று குறுகிய சிந்தனையில் இயங்கிக் கொண்டிருக்கும் , சிறு குழுவினர் அநாமோதய துண்டுப் பிரசுரங்களை அடிக்கடி இரவு வேளைகளில் யாருக்கும் தெரியாமல் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள் .
ஆகவே , நிந்தவூர் வைத்தியசாலையின் புனரமைப்பு வேலைகளை பூர்த்தி செய்வதற்கு நிந்தவூரில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களும் , பிரதேச சபையும் ஒற்றுமையுடன் முடிவுகளை எடுத்து செயற்பட வேண்டும் . வைத்தியசாலையின் வீதியை புனரமைப்பு வேலைகளுக்கான நிதியை பெற்றுக் கொள்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் .
நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையின் அம்புலன்ஸ் வண்டி கடற்கரை வீதியால் சென்று , காரைதீவினை ஊடறுத்து , வெட்டு வாய்க்கால் வழியாக அக்கரைப்பற்றுகல்முனை பிரதான வீதியை அடைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது .

வைத்தியசாலைக்கான புனரமைப்பு வேலைகள் கடந்த 16.07.2011 அன்று கிழக்கு மாகாண அமைச்சர் எம் . எஸ் . உதுமாலெவ்வை தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது . வீதியை புனரமைப்பு செய்வதற்காக , விஸதரிக்க வேண்டிய விடயத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டதனால் , அபிவிருத்தி பணிகள் காலதாமதமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது . இவ்வீதியின் புனரமைப்பு வேலைகளில் அமைச்சர் உதுமாலெவ்வை கவனம் செலுத்த வேண்டும். 
 வேலையை ஆரம்பித்து வைத்தால் முடித்து வைக்கவும் வேண்டும் அல்லவா ?

இது மக்கள் விருப்பம்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top