போராளிகள் நடத்திய தாக்குதலில்
21 எகிப்து இராணுவ வீரர்கள் பலி
எகிப்து
நாட்டின் மேற்கு
பாலைவனப்பகுதியில் போராளிகள் நடத்திய
தாக்குதலில் 21 இராணுவ வீரர்கள் பலியாகினர் என அறிவிக்கப்படுகின்றது.
லிபியாவின்
எல்லையில் இருந்து
சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவில் எகிப்து
நாட்டு மேற்கு
பாலைவனப்பகுதியில் இராணுவம் மீது
போராளிகள் இத்தாக்குதலை
நடத்தியுள்ளனர். போராளிகள் துப்பாக்கி சூடு தாக்குதல்
மற்றும் குண்டுகளை
வீசியுள்ளனர். அல் பராப்ரா ஒயசிஸ் பகுதியில்
எல்லைப்பாதுகாப்பு சோதனை சாவடி
மீதும் போராளிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் இத்தாக்குதலில்
21 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என செய்திகள் வெளியாகியுள்ளது. இதேவேளை,போராளிகளின் இரண்டு கார் வெடிகுண்டை இராணுவ
வீரர்கள் செயல்
இழக்க செய்தனர்
என்று தகவல்கள்
தெரிவித்துள்ளன. இந்த சம்பவம் அங்கு பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எகிப்து அரசு
தீவிரவாதிகள் தாக்குதல் என்று மட்டுமே தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.