42 வருட
கால சேவைக்குப் பின்
ஓய்வு பெற்ற அதிபர்
கல்முனையின்
வரலாற்றில் கல்விச் சேவையில் உன்னதமான சேவைகளை
கடந்த 42 வருடங்களாக
ஆற்றி சிறந்த
சமூகத்தையும், நல்ல கலாசாரத்தையும் உறுவாக்கிய பெறுமையுடன் ஓய்வு பெறகிறார் ஆதிபர்
அல் ஹாஜ்
ஏ.எம்.எம்.பரீத்.
1954.07.07ல் அப்துல் மஜீட், சபுறா
உம்மா தம்பதியினர்களுக்கு
ஐந்தாவது பிள்ளையாக
முஹம்மட் பரீத் பிறந்தார்.
தனது
ஆரம்பக்கல்வியை கல்முனை அல் - அஸ்ஹர் வித்தியாலயத்திலும்
பின் உயர்
கல்வியை கல்முனை
ஸாஹிரா கல்லூரியிலும்
கற்றார்.தான்
ஸாஹிராக் கல்லூரியில் உயர்கல்வியைக்
கற்றுக்
கொண்டிருக்கும் போது தனது 18வது
வயதில் ஆசிரியர்
நியமனத்தைப் பெற்றார்..
1972.10.02ல் முதாலாவது ஆசிரியர் நியமனம்
பெற்று குருநாகல்
மாவட்டத்திலுள்ள குளியாப்பிட்டிய கல்வி வலயத்தில் பண்டுவஸ்
நுவர கல்விக்
கோட்டத்திலுள்ள மெடிக்கே மிட்டியாலய முஸ்லிம் மகா
வித்தியாலயத்தில் தனது முதலாவது கற்பித்தல் பணியைத்
தொடர்ந்தார்.
1972.10.02ல் தனது ஆசிரியர் தொழிலுக்குள்
பிரவேசித்த இவர் அப்பாடசாலையில்
1975.01.07 வரை கடமையாற்றிய பின்னர்
1975.01.08 முதல் 1976.12.31 வரை
யாழ்ப்பாணம் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில்
பயிற்சி பெற்று
பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியராக வெளியேரினார்.
19977.01.01ல் தான்
கல்வி கற்ற
கல்முனை ஸாஹிறாக்
கல்லூரிக்கு இடமாற்றம் பெற்று பொறுப்புக்களை கையேற்ற
நாள் முதல்
1991.01.14 வரை தான் கற்ற பாடசாலையில் அர்ப்பணிப்புடன்
சேவையாற்றி பாடசாலையின் புகழை ஓங்கச் செய்தார்.
இவ்வாசிரியரின்
சிறந்த சேவைகளை
கண்ணுற்ற அன்றிருந்த கல்லூரி அதிபர் எம்.எம்.எம்.இப்றாஹிம் விஷேட
வகுப்பொன்றையும் இவ்வாசிரியரின் பெறுப்பில் ஒப்படைத்தார். அவ்வகுப்பிலுள்ள
மாணவர்களை திறம்பட பரீட்சைக்கு
பயிற்றுவித்ததன் விளைவினால் கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின்
வரலாற்றில் முதற் தடவையாக கல்விப் பொதுத்
தராதர சாதாரண
தரத்தில் பரீட்சை
எழுதிய மாணவன்
ஒருவன் அனைத்துப்பாடங்களிலும்
அதிகூடிய திறமைச்
சித்தியான "8 D" சித்தியை எய்தி
பாடசாலையின் புகழை தேசிய ரீதியில் ஓங்கச்
செய்தார். இப்பெறுமையும்
இவ்வாசிரியரையே சாரும்.
1989.06.01ல் அதிபர் தரம் இரண்டிற்காக
நடைபெற்ற போட்டிப்
பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டார்.
பின்னர்
1991.01.14ல் கல்முனை கல்வியின் இரு கண்களான
ஸாஹிறா கல்லூரியிலிருந்து கல்முனை
மஹ்மூத் மகளிர்
கல்லுரிக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றார்.
கல்முனை
மஹ்மூத் மகளிர் கல்லுரியில் 1991.01.15 முதல் 2002.02.21 வரை தரம் 11 மற்றும்
உயர் தரப்
பிரிவுகளுக்கு பகுதித் தலைவராகவும், உதவி அதிபராகவும்
பின் பிரதி
அதிபராகவும் சிறந்த முறையில் சேவையாற்றிக் கொண்டிருக்கும்
காலத்தில் 1994.06.01ல் அதிபர்
தரம் ஒன்றுக்கான
பதவி உயர்வும்
கிடைத்தது.
2002.02.22ல் கல்முனை அல்-மிஸ்பாஹ் மஹா வித்தியாலயத்தின் அதிபர் பொறுப்பை
ஏற்றார்.
தரம்
09ஆம் வகுப்பு
வரையிருந்த இப்பாடசாலையை தரம்11 மற்றும் உயர்தர
கலைப் பிரிவு
வகுப்புகளை வைத்து இப்பாடசாலையின் தரத்தை "1C" பாடசாலையாக தரம் உயர்த்தியதோடு
இவ்வதிபரின் வருகையின் பின் இப்பாடசாலையின் ஆசிரியர்கள்,
மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததுடன்
இப்பாடசாலையின் முன்னற்றத்திற்காக அரிய பல சேவைகளைச்
செய்த இவர்
2014.07.01 முதல் ஓய்வு பெற்றார்.
.jpg)
0 comments:
Post a Comment