தீ ஏற்பட்ட மாடியில் இருந்து குதித்த நிறைமாத கர்ப்பிணி பெண்!
                                                                 

துருக்கின் நாட்டின் இஸ்தான் புல் நகரில் இருக்கும் தெருவிலுள்ள கட்டிடத்தில் திடீர் என தீபிடித்து கொண்ட்து. தீ மளமளவென பரவி கட்டிடம் முழுவதும் பற்றி எரிந்தது. தீயை அணைப்பதற்கு சுற்றி உள்ளவர்கள் அனைவரும் போராடி கொண்டு இருந்தனர். தீப்பிடித்த கட்டிடத்தின் முதல் மாடியில் நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் நின்று  இருந்தார் அவர் தன்னை காப்பாற்றும் படி கூச்சலிட்டார்.புகைவேறு அதிகமாக வந்து கொண்டு இருந்ததால் அந்த பெண்ணால் பார்க்க கூட முடியவில்லை. மாடி பால்கனிக்கு வெளியே வந்து அந்த பெண் அங்கிருந்து கீழே குதித்தார். அங்கு பெட்ஷீட்டை விரித்து கர்ப்பிணி பெண்ணை பிடித்து கொண்ட பொது மக்கள் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கபட்டது தற்போது அவர் நலமாக உள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top