பதவியில் நீடிப்பதற்கான முயற்சியை கைவிடமாட்டேன்:
ஈராக் பிரதமர் நூர் அல் மாலிகி அறிவிப்பு


மூன்றாவது முறையும் பதவியில் தொடர்வதற்கான முயற்சியை கைவிட மாட்டேன் என உறுதிபடத் தெரிவித்துள்ளார் ஈராக் பிரதமர் நூர் அல் மாலிகி.
இது தொடர்பாக அவர் வெளி யிட்ட அறிக்கை:
பிரதமர் பதவி வேட்பாளராக என்னை முன்னிறுத்திக் கொள்வதை கை விடமாட்டேன். எனது தலைமை யிலான கூட்டணி ஏப்ரல் 30-ஆம் திகதி நடந்த தேர்தலில் அதிக இடங்களில் வென்றது. எனவே பிரதமரை தேர்வு செய்வதற்கான உரிமை எங்களுக்கு உள்ளது. பிரதமர் யார் என்பதை இறுதியாக தேர்வு செய்ய நிபந்தனைகளை விதிக்க எதிர் தரப்பு குழுக் களுக்கு அதிகாரம் கிடையாது. இவ்வாறு மாலிகி தெரிவித்திருக்கிறார்.
ஈராக்கில் அரசு படைகளை வீழ்த்தி முன்னேறி பல இடங்களைக் கைப்பற்றி வருகின்றனர் ஐஎஸ் ஐஎஸ் இயக்க போராளிகள். இந் நிலையில் சொந்த மதப் பிரிவினருக்கு ஆதரவாக இருப்பதாகவும் சர்வாதிகார போக்கில் செயல்படுவதாகவும் உள்நாட்டிலும் வெளி நாடுகளிலும் மாலிகி மீதும் குறை கூறப்படுகிறது.
அண்மையில் கூடிய நாடாளுமன்றம் புதிய சபாநாயகரை தேர்ந்தெடுக்க முடியாமல் போனது. இதற்கு காரணம் பல்வேறு கோஷ் டிகளாக எம்பிக்கள் பிரிந்து கிடப்பது தான். இந்த கோஷ்டிகள் மாலிகி பதவியில் நீடிப்பதை விரும்பவில்லை. இதனால் சர்வதேச நாடுகள் மற்றும் நாட்டின் ஷியா பிரிவின் உயர் தலைவரின் கண்டனத்துக்கு ஆளாகி உள்ளார் மாலிகி.
இந்த சூழலுக்கு மத்தியில் பிரதமர் பதவிக்கு 3 வது முறையாக போட்டியிடும் முயற்சியை கைவிட மாட்டேன் என தெரிவித்திருக்கிறார்.

நாடாளுமன்றம்  விரைவில் கூடவுள்ளது. உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்து வரும் ஈராக்கில் 5 மாகாணங்களில் உள்ள பெரும்பாலான பகுதிகளை போராளிகள் கைப்பற்றி முன்னேறி வருகின்றனர்.

போராளிகளை வீழ்த்த அரசு படைகளுக்கு ஆதரவாக தோள் கொடுக்கும்படி ஷியா மத உயர் தலைவர் அயதுல்லா அலி அல் சிஸ் தானி விடுத்த வேண்டுகோள் மாலிகிக்கு ஆதரவாக பெரும்பான்மை ஷியா பிரிவினரை திருப்பி விட்டுள்ளது. சன்னி போராளிகள் கைக்கு  ஈராக் செல்வதை தடுக்கும் சக்தி மாலிகிக்கு தான் உள்ளது என்ற கண்ணோட்டமும் ஏற்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top