தென் ஆபிரிக்கா
உப ஜனாதிபதி ரமபோஷ
வடமாகாண முதலமைச்சரைச் சந்தித்து கலந்துரையாடினார்
யாழ்ப்பாணத்திற்கு
விஜயம் மேற்கொண்டிருந்த
தென் ஆபிரிக்கா
உப ஜனாதிபதி சிறில்
ரமபோஷ வடமாகாண
முதலமைச்சரை விடுதி ஒன்றில் சந்தித்தார். இன்று
முற்பகல் 11.30 மணியளவில் இச் சந்திப்பு இடம்பெற்றது.
வடமாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் வடமாகாணத்தில்
காணப்படும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பாகவும் விரிவாக
இச்சந்திப்பில் இருவரும் கலந்துரையாடினர் எனக் கூறப்படுகின்றது. இவ்விஜயத்தில்
அவரது பிரத்தியேக
செயலாளர் மற்றும்
அலுவலர்களும் கலந்துகொண்டனர் எனவும் அறிவிக்கப்படுகின்றது.



0 comments:
Post a Comment